சனி, 30 ஜூலை, 2011

இதிகாசங்களின் இழிவுத்தன்மை - பாகம் ஒன்று

          இராமாயணம்,  மகாபாரதம்  இரண்டையும் இதிகாசங்கள்  என்பர். ஆனால்,இந்த உலகிலேயே இப்படியொரு கேவலமான  நூல்கள்  இல்லை. தமிழ் சமுதாயத்தை இழிவுபடுத்தும் நூல்கள். இவற்றையே நாம் இந்து மதத்தின் புனித நூல்களாக தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடுகிறோம். இவற்றின் இழிவுதன்மைகளை கூற பல புத்தகங்களை எழுதினாலும் போதாது.

மகாபாரதம் 
           ஒருவனுக்கு ஒருத்தி என்பதே தமிழ் மரபு. இந்து மதமும் இதைத்தான் கூறுகிறது. ஆனால்,இந்து மதத்தின் புனித நூலாகிய மகாபாரதத்தில் பாஞ்சாலி ஐந்து பாண்டவர்களுக்கு மனைவி. இவள் கற்புக்கரசியாம்? தருமன் சூதாட்டத்தில் வல்லவன். அருச்சுனன் நயவஞ்சகன். இவர்கள்  மட்டுமல்ல அனைவருமே அயோக்கியர்கள். கீதை இந்துகளின் புனித நூல்.இதை கண்ணன் எழுதினான் என்று கூறபடுகிறது. ஆனால், வியாசர் எழுதிய பின் இடையில் சொருகின இடைசொருகளே கீதை. அந்த நூலினை படித்தால் திராவிடர்களை இழிவுப்படுத்தி எழுதி உள்ளதை காணலாம். இப்படி நம் மக்களை இழிவுப்படுதுகிற மகாபாரதத்தினை நாம் புனித நூலாக கருதலாமா? இந்து மதம் பிராமணர்கள் கொண்டு வந்தது. அவர்களை பெருமைப்படுத்த எழுதிய நூல்.


              எடுத்துகாட்டாக, கீதையில் அருச்சுனன் போரிடுவதற்கு தயங்கியதற்கான காரணத்தை கண்ணன் கேட்டபோது அருச்சுனன் அளித்த பதில், அருச்சுனன் எதிரில் நிற்பவர்களை கண்டான். அவன் ஆசிரியர்களும் நண்பர்களுமே நின்றார்கள். என் இன ஆண்  மக்களை நான் அழித்தால் என் இன பெண்கள் ஆண்கள் எண்ணிக்கை குறைவினால் வேறு இன ஆண்களை மணந்து கொள்வார்கள், இதனால் குல நாசம் ஏற்படும், என் குலம் அழிந்து விடும் என்று கருதினான். 

             இதிலிருந்து அவனின் இனவெறியை அறிந்து கொள்ளலாம். இவ்வாறு பிரமணர்களுக்கு இருக்கும் இனவெறி நமக்கு ஏன் இல்லை?  இவ்வாறு கேட்பது முட்டாள்தனம். ஏனென்றால் இங்கு வாழும் அனைவரும் உண்மையான தமிழர்கள் அல்லர். இனகலப்பு ஏற்பட்டு விட்டது. எங்கெங்கிருந்தோ வந்தவர்கள் இங்கு குடியமர்ந்து விட்டார்கள். இந்த இதிகாசங்களை கூர்ந்து கவனித்தால் அவற்றின் உட்கருத்துக்கள் புரியும். அவர்களின் இழிவான கலாச்சாரம் புரியும்.

தொடரும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக