ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2011

இதிகாசங்களின் இழிவுத்தன்மை - பாகம் இரண்டு (இராமாயணம் )

          காதல் என்றால் என்ன என்பதை காட்ட கூடிய இலக்கியம் ராமாயணம்  என்று கூறுவார்கள். சீதையும் ராமனும் கொண்டிருந்தது உண்மையான காதல் என்றால் ஊரார்  சந்தேகப்படுகிறார்கள் என்பதற்காக ஊரைவிட்டு காட்டிற்கு அனுப்பியது ஏன்? தன்னை நம்பி வந்தவளுக்கு துரோகம் செய்வது தான் உண்மையான காதலா? 
      
         இராமாயணத்தில் நடக்கும் போர் முறையை கவனித்தால் ராமன் வீரத்தோடு போரிட்டு வெற்றி பெறவில்லை. தலையை கொண்டு போய் கடலில் போடுகிறது ராமபாணம், இறந்தவரை எழுப்புகின்ற சஞ்சீவி மலை என்று நம்பமுடியாத காரியங்களை கூறுகிறது.

          தன்னை வளர்த்த ராவணனை விட்டுவிட்டு பதவி ஆசையால் ராமனின் பக்கம் நின்று தன் சகோதரனையே காட்டி கொடுத்த வீபிஷ்ணனை புகழ்கிறது ராமாயணம்.  ராமா! ராமா! என்று பூசிக்கிரோமே அவன் செய்த காரியம் என்ன தெரியுமா?

          ராமன் ஆட்சியில், ஒருநாள் ஒரு பிராமணன் இறந்து போன தன் பிள்ளையினுடைய உடலை சுமந்து கொண்டு, ராமனிடம் வந்தான். பலவிதமான வசை மொழிகளை கூறுகிறான். பின்னர், அவன் ஒரு சூத்திரன்  காட்டில் தவம் பண்னுகின்றான். அவனை கொல்லாமல் இருந்த காரணத்தினால் என் குழந்தையின் உயிர் பிரிந்து விட்டது, என்று கூறினான். அந்த சூத்திரனை கொன்றால் தன் குழந்தையின் உயிர் திரும்ப வரும்  என்று அசிரீரி கூறியதாகவும் சொன்னான்.  உடனே, ராமன் மகிழ்ச்சி அடைந்து சூத்திரனை கொள்ள காட்டிற்கு சென்றான். ஒரு துறவி என்று கூட நினையாமல் சூத்திரனை கொன்றான். கொல்வதற்கு முன் அவன் கூறிய வார்த்தைகள் ராமாயணத்தின் மொழிப்பெயர்ப்பு நூல்களில் கொடுக்கப்பட்டுள்ளது. 
                    "ஹே! ஹஸ்த தசஷின மருத்ஸ் பசி சொர்தவி சச்ய 
                     ஜீவதலே வெஸ்ருஜா சூத்திர முஜலக்று பாணம்
                     ராமஸ்ய கத்ரமஷி .............." 
           பொருள்: ஓ! வலது கையே இறந்து போன பிராமண சிறுவன் மறுபடியும் உயிர் பெற்று எழுவதற்கு இந்த சூத்திர துறவியை கொல்லுவதே மருந்தாகையால் கூசாமல் இவனை வெட்டிவிடு, என்கிறான் ராமன். 

           அந்த துறவியை கொன்றதும் சிறுவன் உயிர் பெற்று எழுந்ததாக கூறுகிறது, ராமாயணம்.      (மூலம் : ஞான சூரியன்) 
                   இப்படிப்பட்ட அயோக்ய ராமன்தான் உத்தமனாம், கடவுளாம்!  இதிலிருந்து அறியலாம் பிரமணர்களை கடவுளாக வணங்க வேண்டுமென அவர்கள் சித்தரித்த நூலே ராமாயணம் என்பது விளங்கும்.    '' ராமன் '' இவனை கடவுளாக வணங்கினால் நம் தமிழ் இனத்திற்கே அவமானம். ஆயிரகணக்கான ஆண்டுகளாக தமிழ் இனத்திற்கு அவமானத்தை விளைவித்து கொண்டிருகிறோம். 
சிந்தித்து பாருங்கள் என் தமிழ் தோழமைகளே !!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக