சனி, 29 அக்டோபர், 2011

எங்கே போனது எங்கள் தமிழ்

விரைந்து போகின்றது காலம் அதில்
மறைந்து போகின்றது தமிழ் !

அறிவித்த ஆசிரியர்களும்
தெரிவித்த  அறிஞர் பெருமான்களும் 
தேடியே சேர்கிறார்கள் தங்கள் பிள்ளைகளை 
அயல்மொழி கல்வியில்....!
வீதியில் விளம்பரமும் 
வீடேரும் கடிதங்களும் 
ஏந்தியே திரிகின்றன அம்மொழியை...!

தேனீரும் குழம்பியும் குடித்தால் திகட்டலாம் 
தமிழில் படித்தால் திகட்டுமோ?

அம்மாவென்றும்,அப்பாவேன்றும் 
தாய்மொழியில் அழைப்பதில் தரிப்பதில் இன்பம் 
அந்நிய மொழியில் தரித்திடுமோ?

இரண்டாயிரம் வருடம் 
முதிர்ந்தவள் என்றாலும் 
முலைப்பால் கொடுத்தவள் அல்லவோ?

கூனிக்குறுகி நடக்கிறாள் அவள் 
குடிசை கொடவிடினும் 
குச்சியாவது கொடுங்கள்!

உங்கள் சந்ததிக்கு 
அயல்மொழிக்கு  அர்த்தம் தேடும் 
அகராதிகளை அழித்துவிட்டு 
தாய்மொழிக்கு அர்த்தம் தேடும் 
அகராதிகளை அளித்துவிடாதிர்கள்....!

உயிருக்கு மொழிக்கொடுத்த தமிழ் தாயவளை 
இறக்கவிடதிர்கள் தோழர்களே உங்களை 

இரஞ்சியே  கேட்கிறோம்...........!!!!?

                                                                   எழுத்து.காம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக