கடந்த50 ஆண்டுகளில் கற்பனை பண்ணிப்பார்க்க முடியாத தினுசில் பழக்க-வழக்கங்களிலும் சிந்தனைகளிலும் , முக்கியமாய் பெண்கள் நிலையில் பெரும் மாற்றங்கள் வந்துள்ளன. இந்த மாற்றங்கள் வளர்ச்சியா, வீக்கமா? உறுதியாய் பெருமளவில் வளர்ச்சி தான்..... ஆனால், ஆங்காங்கே வீக்கங்களும் தோன்றியுள்ளதை ஒப்புக்கொள்ளதான் வேண்டும்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi8kQUz6fVlmnbLDaYDzC2a_WpIVVwvyPvm0Vl6QHyWZp3pxQdDNpkQ9bSzUsY00GO0ioPvQDrmq6ywyo4ejsn86qJHOfR88gwdXwdJ1LutholCvJApoziNNDcLgTC2kYLuhzRnJuYegbw/s1600/images.jpg)
ஆனால். இந்த விழிப்புணர்வே சில பெண்களிடம் எல்லை மீறி , வளர்ச்சிக்கப் பதில் வீக்கத்தைத் தந்திருப்பதும் கவலையைத் தருகிறது.' நான் சம்பாதிக்கிறேன்,என் வாழ்க்கையை என்னால் பார்த்துக்கொள்ள முடியும்.ஆக , யாருடைய தயவும் எனக்குத் தேவையில்லை' என்று சில பெண்கள் , பெற்றோரையும் கணவனையும் குடும்பத்தையும் தூக்கியெறிவதை காண்கையில் , கவலை அதிகமாகிறது.' புல்லானாலும் புருசன்' என்று கண்மூடித்தனமாய் அடிமைப்பட்டிருப்பது தேவையே இல்லை. என்றாலும், விட்டுக்கொடுப்பதும் , அனுசரித்துச் செல்வதும் , நாளைக்குக் கண்டிப்பாய் விடியுமென்ற நம்பிக்கையுடன் வாழ்வதும் , வாழ்க்கைக்கு அர்த்தம் சேர்க்கும் என்பதை மறந்துவிட்டால் எப்படி!!!!!!!!!!